துபாய்: மகளை கொன்ற இந்திய பெண்-15 ஆண்டு சிறை
துபாய்: முதல் மகளைக் கொன்றும், 2வது மகளைக் கொல்ல முயன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற இந்தியப் பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து துபாய் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
துபாயைச் சேர்ந்த அந்த இந்தியப் பெண்ணுக்கு வயது 24. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அழர் தனது மூன்றரை வயது மகள் நசுவாவை கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து பிறந்து 22 மாதமே ஆன நஜியாவையும் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். பின்னர் தன்னையும் கத்தியால் குத்திக் கொண்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். 2வது மகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் அப்பீல் கோர்ட்டில் மனு செய்தார். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் நடந்தபோது நல்ல மனநிலையில்தான் அப்பெண் இருந்துள்ளார். எனவே வேண்டும் என்றேதான் தனது குழந்தையைக் கொன்றுள்ளார் என்று கூறி 10 ஆண்டு சிறைத் தண்டனையை 15 ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பளித்தார்.
இந்தியப் பெண்ணால் குத்தப்பட்ட 2வது குழந்தைக்கு 35 சதவீத உடல் ஊனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளித்த அப்பெண்ணின் கணவர், தங்களுக்கு 2001ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், அன்று முதல் இதுவரை தனது மனைவிக்கு மன நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications