For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் முதல்வராவது உறுதி- ஜெகன்மோகன் ரெட்டி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஒருநாள் நான் ஆந்திர முதல்வராவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு, அவரின் மகனும், எம்.பியுமான ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக முயனறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், அதை நிராகரித்து ரோசையாவை முதல்வராக நியமித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோகன் ஆதரவாளரான அமைச்சர் சுரேகா, பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தனது சொந்த தொகுதியான கடப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசுகையில்,

நான் ஆந்திராவின் எந்த பகுதிக்கு போனாலும் மக்கள் இடைமறித்து எப்போது முதல்வர் ஆவீர்கள்? என்று தான் கேட்கிறார்கள். இன்று இல்லை என்றாலும் நான் என்றாவது ஒரு நாள் முதல்வர் ஆகியே தீருவேன். இதை யாராலும் தடுக்க முடியாது.

எனக்கு இன்னும் வயது இருக்கிறது. உங்களது ஆசீர்வாதமும் இருக்கிறது. இதனால் நான் ஆந்திர மாநிலத்துக்கு முதல்வராவது உறுதி. எனவே இது பற்றி மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X