ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மாயம்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மெல்போர்ன் அருகில் உள்ள க்ளென் ஐரிஸ் என்ற இடத்தில் தங்கி படித்துவரும் 22 வயது மாணவன் தீபக் குமார் சௌத்ரி கடந்த 7 நாட்களாக காணவில்லை.
தீபக்குடன் தங்கியிருந்த நண்பர்கள் உடனடியாக போலீசில் புகார் அளிக்கவில்லை. நேற்று தான் புகார் அளித்துள்ளனர். கடந்த வியாழன் கிழமையன்று காலையில் கிரௌன் கேசினோவை நோக்கி தீபக் செல்வதை கடைசியாக பார்த்ததாக நண்பர்கள் போலீஸிடம் கூறியுள்ளனர்.
தீபக் குமாரின் செல்போனும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications