சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் ஒபாமா- தாவூத்- பின் லேடன்!
உலகின் மோசமான தாதாக்களி்ல ஒருவர் தாவூத் இப்ராகிம். மும்பை தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு உள்ளது.
பாகிஸ்தானில் தொடர்ந்து தலைமைறவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபரை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கி உள்ளார் தாவூத். அதேசமயம், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா ஆகியோரை விட தாவூத் சக்தி வாய்ந்த நபராகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிம் 50வது இடத்தில் இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் 36வது இடத்திலும், மிட்டல் 55வது இடத்திலும், டாடா 59வது இடததிலும் உள்ளனர்.
அல் கொய்தா தலைவர் பின் லேடன் 37வது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் பாரக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த குற்ற கட்டமைப்பான டி கம்பெனியின் தலைவர் தாவூத் இப்ராகிம் என்று போர்ப்ஸ் வர்ணித்துள்ளது.
பட்டியலில் உள்ள பிற முக்கியஸ்தர்கள்..
சீன அதிபர் ஹூ ஜின்டாவோ (2), விலாடிமிர் புடின் (3), போப் (11), ஹில்லாரி கிளிண்டன் (17), கார்டன் பிரவுன் (29), பில் கிளிண்டன் (31), சையத் யூசுப் ரஸா கிலானி (38), முகேஷ் அம்பானி (44).