Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை காணப்பட்டது. பொதுவாக வறண்ட வானிலை நிலவியது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் மங்கலாபுரத்தில் 3 செமீ மழை பெய்தது. பாளையங்கோட்டையில் ஒரு செமீ மழை பெய்தது.

தெற்குக் கடலோரத் தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. உட்புற தமிழகத்தில் வழமையை விட கூடுதலான வெப்ப நிலை காணப்பட்டது.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம்.

சென்னை நகரில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தமட்டில், பொதுவாக மேக மூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

அடுத்த 2 நாட்களுக்கு வானிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் இருக்காது.

7 மாவட்டங்களில் கூடுதல் மழை- 7 மாவட்டங்களில் பற்றாக்குறை

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழையின் முதல் கட்டத்தில் 7 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் மழை பெய்துள்ளது. 7 மாவட்டங்களில் பற்றாக்குறை காணப்பட்டது.

அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரை பெய்துள்ள மழை அளவு குறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கை..

நீலகிரியில் அதிகம்...

அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரையிலான காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக 71.7 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது. இங்கு எப்போதும் இல்லாத அளவாக 187 சதவீதம் கூடுதலாக மழை பெய்து உள்ளது.

இந்த மாவட்டத்தின் இயல்பான மழை அளவு 24.9 செ.மீ. ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் 40.2 செ.மீ, நாகப்பட்டினத்தில் 63 செ.மீ., கடலூர் மாவட்டத்தில் 52.7 செ.மீ., திண்டுக்கல் மாவட்டத்தில் 30.5 செ.மீ., விழுப்புரம் மாவட்டத்தில் 36.4 செ.மீ., திருவாரூர் மாவட்டத்தில் 37.7 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது.

இது வழக்கத்தை விட 2 மடங்கு கூடுதல் ஆகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவாக கூடுதல் மழை பெய்து உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 72 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 63 சதவீதமும், கடலூரில் 53 சதவீதமும், விழுப்புரத்தில் 38 சதவீதமும், திருவாரூரில் 24 சதவீதமும், திண்டுக்கல்லில் 21 சதவீதமும் மழை கூடுதலாக பெய்து இருக்கிறது.

17 மாவட்டங்களில் இயல்பான மழை...

சென்னை, அரியலூர், கோவை, ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான அளவே மழை பெய்து உள்ளது.

மதுரையில் பற்றாக்குறை...

தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவான அளவு மழை பெய்து உள்ளது என்று அதில் தெரிவிக்க்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+