பாக். அமெரிக்கர்களுக்கு விசா-இந்தியா கெடுபிடி
டெல்லி: இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த லஷ்கர் அமைப்புடன் இணைந்து அமெரிக்கர்கள் செயல்பட்டது அம்பலமாகியுள்ளதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கர்களுக்கு விசா வழங்குவதில் பெரும் கெடுபிடிகளை மேற்கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இதுதொடர்பாக பலவேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா வர விரும்பி இங்கு விண்ணப்பம் தரும் பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கர்களின் விண்ணப்பங்கள் இனிமேல் டெல்லியில்தான் பிராசஸ் செய்யப்படவுள்ளது. டெல்லி அனுமதி கொடுத்த பிறகுதான் அவர்களுக்கு விசா வழங்கப்படும்.
இதுதொடர்பான உத்தவை மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை பிறப்பித்துள்ளார். அமெரிக்கா உள்பட எந்த வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் வழங்கப்படும் பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கர்களின் விசா விண்ணப்பங்கள் இனிமேல் டெல்லியில் மட்டுமே பிராசஸ் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்பவர் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் சதி வேலையில் ஈடுபட லஷ்கருடன் இணைந்து செயல்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த நடவடிக்கை.












Click it and Unblock the Notifications