For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொன்சேகாவுக்கு உடனடி ஓய்வு- ராஜபக்சே உத்தரவு - நாளை பிரியாவிடை

Google Oneindia Tamil News

Sarath Fonseka
கொழும்பு: சரத் பொன்சேகாவுக்கு உடனடியாக ஓய்வு அளிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாளையே அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சியை நடத்தி விடை கொடுக்கவுள்ளது இலங்கை ராணுவம்.

இலங்கை கூட்டுப் படைத் தலைவராக இருந்து வந்த பொன்சேகா அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து கடிதம் கொடுத்தார். இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த ராஜபக்சே டிசம்பர் 1ம் தேதியுடன் அவருக்கு ஓய்வளிக்க முதலில் அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது உடனடியாக அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான கடிதமும் பொன்சேகாவுக்கு அனுப்பப்பட்டு விட்டது.

இதையடுத்து நாளை பொன்சேகாவுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X