மதுரையில் ரயில் டிக்கெட்களில் மோசடி - ரூ. 2 லட்சம் அபராதம்
மதுரை: இ டிக்கெட்களில் மோசடி செய்தும், பிறர் பெயர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்களில் மோசடியாக பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பெருமளவில் ரயிலில் பயணிகள் வருகிறார்கள்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விழாக்காலங்களில் டிக்கெட் கிடைப்பதில்லை. சிறப்பு ரயில்கள் விட்டாலும் கூட டிக்கெட் கிடைப்பதில்லை.
இதற்கு இ டிக்கெட் எனப்படும் இன்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதியே காரணம். பல ரயில்வே டிக்கெட் புரோக்கர்கள் இ டிக்கெட்களை பெருமளவில் முன்பதிவு செய்து வைத்துக் கொண்டு பெரிய விலைக்கு விற்று விடுகிறார்கள். இதனால் அப்பாவி பயணிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து மதுரையில், தெற்கு ரெயில்வே ஊழல் தடுப்பு பிரிவு, டிக்கெட் பரிசோதனை படை இணைந்து முக்கிய ரயில்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
இந்த சோதனையில் முன்பதிவு பட்டியலில் பெயர் இடம் பெறாத ஏராளமான இ-டிக்கெட் பயணிகள் முன்பதிவு மற்றும் பொது பெட்டிகளில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல உரிய ஆவணங்கள் இல்லாமல் இ-டிக்கெட் முறையில் பலர் பயணம் செய்ததும் தெரிய வந்தது. இ-டிக்கெட் முறையை தவறாக பயன்படுத்திய 64 பேரை டிக்கெட் பரிசோதனை படை கண்டு பிடித்தது. அவர்களிடம் அபராத தொகையாக ரூ.48 ஆயிரத்து 75 வசூலிக்கப்பட்டது.
மேலும் இ-டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள் வேறு ஒருவரின் பெயர்களில் டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்தவர்கள் என 324 பேரை டிக்கெட் பரிசோதனை குழு கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் அபராத தொகை வசூலித்தது.
முன்பதிவு, இ-டிக்கெட் முறையில் அதிக அளவில் மோசடி நடந்துள்ளதால் முக்கிய ரயில் டிக்கெட் முன் பதிவு மைங்கள், ரெயில் பயண சீட்டு ஏஜெண்டுகளின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது முறையற்ற விதத்தில் டிக்கெட் விற்பனை செய்ததாக புரோக்கர்கள் 5 பேரும், ஒரு ஏஜெண்டும் சிக்கினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications