மீண்டும் 17000 ஐத் தாண்டிய சென்செக்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் ஏறுமுகம் தொடங்கியிருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் 183 புள்ளிகள் உயர்ந்ததால், சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது.
இன்றைய வர்த்தகத்துன் துவக்கமே 17,043.32 புள்ளிகளைத் தாண்டி அசத்தலாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 56.45 புள்ளிகள் அதிகரித்து 5,055.40 புள்ளிகளோடு தொடங்கியது.
இன்றைய வர்த்தகத்தி்ல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.29 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பரா 0.99 சதவீதமும், டி.எல்.எப். 2.54 சதவீதமும், ஸ்டெர்லைட் பங்குகள் 2.42 சதவீதமும், மாருதி சுசுகி 2.47 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.87 சதவீதமும் விலை உயர்வில் கைமாறின.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் குறியீட்டு எண் சென்செக்ஸ் 183.68 புள்ளிகள் அதிகரித்து 17032.51 புள்ளிகள் ஏற்றத்துடன் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications