அசிங்கம் செய்து கொண்டே பூஜையும் செய்த அர்ச்சகர் தேவநாதன்
தேவநாதனின் லீலைகளைப் பார்த்தால் மகா மோசமான காமவெறியன்கள் கூட தோற்றுப் போய் விடுவார்கள் போல் உள்ளது. அப்படி ஒரு கேவலத்தை அர்ச்சகர் தொழிலுக்கும், கோவில் புனிதத்திற்கும் ஏற்படுத்தி வைத்துள்ளார் தேவநாதன்.
தேவநாதன் பெண்களை வளைக்கப் பயன்படுத்திய வார்த்தைகள் - கோவில் கருவறைக்குள் வைத்து செக்ஸ் உறவு கொண்டால், எனறும் இளமையோடு இருக்கலாம் என்பதுதான். இதைச் சொல்லித்தான் பல பெண்களையும் வளைத்துள்ளார் தேவநாதன்.
கடவுளுக்குப் பூஜை செய்வதை தெய்வச் சேவையாக பல அர்ச்சகர்கள் கருதுகிறார்கள். ஆனால் தேவநாதன் அதை ஒரு வேலை போல பாவித்துள்ளார் என்பது அவரது காமக் களியாட்டங்களில் ஒரு காட்சியைப் பார்த்தால் தெரியும்.
அந்தக் காட்சி...
சேலையுடன் ஒரு பெண்ணை கருவறைக்குள் நிற்க வைத்திருக்கிறார் தேவநாதன். கருவறை சுவற்றோடு அந்தப் பெண்ணை ஒட்டி நிற்க வைத்து காமச் சேட்டைகளைச் செய்கிறார்.
அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்த்துக் கொள்கிறார் - யாரும் வருகிறார்களா என்று. கிட்டத்தட்ட 10 நிமிடம் இந்த காட்சி ஓடுகிறது.
அந்த சமயத்தில், ஒரு பக்தர் சாமி கும்பிட வருகிறார். சத்தம் கேட்டு சுதாரிப்படைந்து வெளியே வரும் தேவநாதன், அந்த பக்தர் தரும் பூஜைத் தட்டை வாங்கிக் கொண்டு கொஞ்சம் கூட மன உறுத்தலே இல்லாமல், ஸ்லோகம் பாடி அர்ச்சனை செய்கிறார்.
பூஜையை முடித்து விட்டு அவரிடம் தட்டைக் கொடுத்து அனுப்பி விட்டு மறுபடியும் உள்ளே சென்று அந்தப் பெண்ணிடம் தனது அசிங்கத்தைத் தொடருகிறார்.
இதேபோல இன்னொரு காட்சியில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடமும் தனது லீலையை மேற்கொள்கிறார் தேவநாதன். அந்தப் பெண் முகத்தில் ஆரம்பத்தில் பயம் தெரிகிறது. ஆனாலும், தனது மாயப் பேச்சால் அவரை சரிக்கட்டி வேலையை தொடருகிறார் தேவநாதன்.
காஞ்சிபுரம் என்ற பெயரைக் கேட்டாலே இனி எல்லோருக்கும் அலர்ஜியாகப் போகிறது. அந்த அளவுக்கு அசிங்கமாக நடந்து கொண்டுள்ளார் தேவநாதன்.