தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் மழை
சென்னை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை விலகிப் போய் விட்டதால் தமிழகத்தில் இன்று சில இடங்களில் மட்டும் மழை காணப்பட்டது.
2வது கட்ட வட கிழக்குப் பருவ மழை கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் விளாசித் தள்ளி விட்டது. இந்த நிலையில் குமரிக் கடலி்ல் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது அரபிக் கடலுக்குப் போய் விட்டது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் பரவலாக மழை குறைந்தது.
இன்று சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை காணப்பட்டது.
அதிகபட்சமாக பழனியில் 5 செமீ மழை பெய்தது. தளியில் 4 செமீ, ராமநாதபுரம், போடிநாயக்கனூரில் தலா 3 செமீ மழை பெய்தது. திருவாடானை, அவினாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 2 செமீ மழை பெய்தது.
கும்பகோணம், பேராவூரணி, திருவாரூர், மணல்மேல்குடி, ஆலங்குடி, மயிலாடுதுறை, நாகர்கோவில், பூதப்பாண்டி, அரூர், மேட்டூர் அணை, பவானிசாகர், தாராபுரம், கூடலூர் பஜார், அரவக்குறிச்சி, தோகமலை, மணப்பாறை, தேவகோட்டையில் தலா 1 செமீ மழை பெய்தது.
19ம் தேதி வரையிலான கால கட்டத்தில், தமிழகத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் சில பகுதிகளில் மேக மூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications