For Daily Alerts
Just In
ராகுல் திருப்பதி வருகை-பாதுபாப்பு தீவிரம்
திருப்பதி: அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராகுல்காந்தி நாளை (18ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருப்பதி வருகிறார். விமானம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரை இறங்குகிறது.
அங்கிருந்து கார் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துக்குச் செல்வும் ராகுல், அங்கு மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
பின்னர் ஐதராபாத், விஜயவாடா நகரங்களுக்கு செல்கிறார். உஸ்மானியா பல்கலைக்கழகம், மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்கிறார்.
ராகுல்காந்தி வருகையையொட்டி திருப்பதி, ஐதராபாத், விஜயவாடா நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, November 17, 2009, 12:38 [IST]