போதையில் போலீஸ்காரர்-உதைத்த இருவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சேலம்: ஆத்தூரில் குடிபோதையில் இருந்த காவலரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவர் சென்னையில் காவலராக பணியாறி வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, போதையில் இருந்த விஜயக்குமார், அங்கிருந்த ஒரு பைக்கில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அந்த இரண்டு சக்கர வாகனத்திற்கு சொந்தகாரரான இளைஞர் தன் நண்பருடன் அங்கு வந்தார்.
அப்போது, விஜயக்குமாருக்கும் அந்த 2 இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விஜயக்குமார் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, விஜயகுமாரின் புகாரின் பேரில் ஆத்தூர் இளைஞர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications