வியாசர்பாடி 'சப்வே' மழை நீர் வெளியேற்றம்- போக்குவரத்து சீரடைந்தது
சென்னை: சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடந்த மழை நீர் வெள்ளம், 7 மோட்டார்களை வைத்து அகற்றப்பட்டது. இதையடுத்து அதன் வழியாக போக்குவரத்து தொடங்கியது.
சென்னை வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வ சுரங்கப் பாதையில் லேசான மழை வந்து விட்டால் கூட நிரம்பி வெள்ளம் தேங்கி விடும். இதனால், போக்குவரத்து கடும் பாதிப்பை சந்திப்பது வழக்கமாக உள்ளது.
இந்த நிலை வருடக் கணக்காக தொடர்ந்து கொண்டுள்ளது. ஆனாலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டுப் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் அங்கு தேங்கி விட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தண்ணீரை சுத்தமாக வழித்தெடுக்க மாநகர மேயர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 50 குதிரைத்திறன் கொண்ட 3 மோட்டார்கள், 35 குதிரை திறன் கொண்ட ஒரு மோட்டார், 13.5 குதிரைத் திறன் கொண்ட 4 மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ன.
இங்கிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரை, குழாய்கள் மூலமாக ஓட்டேரி நல்லா கால்வாய்க்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் இந்தப் பாதை வழியாக போக்குவரத்து சீரடைந்தது.
பெருமளவில் தேங்கிக் கிடந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டதையடுத்து மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.
-
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications