2 நாள் போலீஸ் காவலில் 'அசிங்க' அர்ச்சகர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்துள்ளது.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகரான தேவநாதன் குருக்கள் என்பவர், கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்து அசிங்கப்படுத்தினார்.
இதை அவரே செல்போன் கேமராவில் பதிவு செய்தும் வைத்திருந்தார். இந்த செல்போன் பழுதடைந்ததால் அதை பழுது பார்க்க ஒரு கடையில் கொடுத்தார். அந்தக் கடைக்காரர், செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்து அவற்றை காப்பி செய்து கொண்டு வெளியில் விட்டு தேவநாதனின் அசிங்கத்தை அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்.
இதையடுத்து தலைமறைவானார் தேவநாதன். மேலும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை டிஸ்மிஸ் செய்த உயர்நீதிமன்றம் தேவநாதன் மீது மட்டுமல்லாமல், அவருடன் உல்லாசமாக இருந்து அசிங்கத்திற்குத் துணை போன பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் சுதா முன்பு ஆஜரானார் தேவநாதன். அவரை 30ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்ட்டார் தேவநாதன்.
இந்த நிலையில் அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் மனு செய்தார்.
ஆனால் தேவநாதனின் வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரது வக்கீல் கூறுகையில், அர்ச்சகர் தேவநாதன் மீது கோவில் நிர்வாகமோ, பக்தர்களோ எந்த புகாரும் கொடுக்கவில்லை. போலீசார் சி.டி. ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. புகார் தொடர்பாக சி.டி. ஆதாரம் எதையும் போலீசார் தாக்கல் செய்யவில்லை. எனவே தேவநாதனை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் வாதிட்டார்.
இரு தரப்பு கருத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் சுதா, தேவநாதனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.
விசாரணைக்குப்பின் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தேவநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த தேவநாதனை போலீஸார் பாதுகாப்புடன் அங்கிருந்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications