ரயிலை குண்டு வைத்துத் தகர்த்தனர் மாவோயிஸ்டுகள் - 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்ததில், ரயில் தடம் புரண்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டாடா - பிலாஸ்பூர் பாசஞ்சர் ரயில் நேற்று இரவு மனோஹர் - பசோய்டா ரயில் நிலையங்களுக்கு இடையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 2 பயணிகள் கொல்லப்பட்டனர். 47 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வ அமைச்சர் மமதா பானர்ஜி கூறுகையில், இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகள் இருந்தன. இதில் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 3 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. என்ஜினும் சேதமடைந்துள்ளது.

தலைகுப்புற விழுந்த ஒரு பெட்டியிலிருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 47 பேர் காயமடைந்துள்ளனர். 6 பயணிகள் இன்னொரு பெட்டிக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ரயில் தண்டவாளத்தைத் தகர்க்கும் நோக்கில் இந்த குண்டுகள மாவோயிஸ்டுகள் வைத்துள்ளனர். இதுதவிர யாரும் மீட்புப் பணிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக மேலும் 3 அல்லது நான்கு இடங்களில் குண்டுவெடிப்புகளை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர் என்றார் மமதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+