வாடிக்கையர் சேவையில் முந்தைய தலைமுறைக்கும் பின்னே உள்ள பிஎஸ்என்எல்
சென்னை: இன்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வைத்து விழா நடத்தி அறிமுகப் படலத்தை முடித்துவிட்டார்கள் அதிகாரிகள். அவரவர் கேக் - ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு அத்தோடு மறந்துவிட்டார்கள் விஷயத்தை.
சரி... பிஎஸ்என்எல் 3 ஜி சேவை மக்களைச் சென்று சேர்வது கிடக்கட்டும்... அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குத் தெரிந்திருக்கிறதா முதலில் என்று பார்க்க, சென்னை தாமஸ் மலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு ஒரு நடை போனோம்.
செல்போன் சேவைப் பிரிவில் அமர்ந்திருந்த ஒரு பெண் அலுவலரிடம் 3 ஜி பற்றிய விவரம் கேட்டோம். பக்கத்து சீட்காரருடனான தனது பேச்சுக் கச்சேரியை வேண்டா வெறுப்பாக இடை நிறுத்திவிட்டு, எங்களுக்கு எந்தத் தகவலுமில்லை... என்றவர், வெளியே போஸ்டர் ஒட்டியிருக்கிறோம் படித்துக் கொள்ளுங்கள் என்றார்.
சரி, வேறு அலுவலரைக் கேட்கலாம் என்று முடிவு செய்து போய்க் கேட்டோம். அவரோ சாதாரண செல்போன் அழைப்புக் கட்டண விவரங்கள் அடங்கிய ஒரு தாளைக் கையில் கொடுத்து, இதிலிருக்கு படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூசாமல் கொடுத்துவிட்டு போயே போய்விட்டார்.
வெறுத்துப் போய்விட்டது... சரி இந்த ஒரு அலுவலகம்தான் இப்படியா... அல்லது மற்ற அலுவலகங்களிலும் 3 ஜிக்கு வாடிக்கையாளர் சேவை லட்சணம் இதுதானா என்று அறிய கேகே நகர் இணைப்பகத்துக்கு ஒரு விசிட் அடித்தோம். அங்கே இருந்த பெண் ஊழியர், என்ன 3 ஜி விவரம் வேணுமா... இந்தாங்க என்று ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கையில் கொடுத்தார். ஏதும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. அந்தப் பிரசுரத்தில் 3 ஜி மொபைலின் மகாத்மியங்களை ஒரு வண்டி அளவுக்கு அடித்துத் தள்ளியிருந்தார்கள்.
ஆனால் எப்போது சர்வீஸ் கிடைக்கும், கட்டணம் எவ்வளவு, தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் எவ்வளவு, புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் என்ன... பிராட்பேண்ட் ஸ்பீட் என்ன... தொலைக்காட்சி சேவை முற்றிலும் இலவசமா அல்லது சேனலுக்கு இவ்வளவு என்று பாக்கெட்டில் கை வைப்பார்களா? ம்ஹூம்.. ஒரு தகவலுமில்லை.
பானையிலிருக்கிற எல்லா சோற்றையும் கொட்டியா பதம் பார்க்க முடியும்... அட போங்கப்பா... இது 3 ஜி இல்லை... மைனஸ் 3 ஜி !!
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications