வாடிக்கையர் சேவையில் முந்தைய தலைமுறைக்கும் பின்னே உள்ள பிஎஸ்என்எல்
சென்னை: இன்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வைத்து விழா நடத்தி அறிமுகப் படலத்தை முடித்துவிட்டார்கள் அதிகாரிகள். அவரவர் கேக் - ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு அத்தோடு மறந்துவிட்டார்கள் விஷயத்தை.
சரி... பிஎஸ்என்எல் 3 ஜி சேவை மக்களைச் சென்று சேர்வது கிடக்கட்டும்... அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குத் தெரிந்திருக்கிறதா முதலில் என்று பார்க்க, சென்னை தாமஸ் மலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு ஒரு நடை போனோம்.
செல்போன் சேவைப் பிரிவில் அமர்ந்திருந்த ஒரு பெண் அலுவலரிடம் 3 ஜி பற்றிய விவரம் கேட்டோம். பக்கத்து சீட்காரருடனான தனது பேச்சுக் கச்சேரியை வேண்டா வெறுப்பாக இடை நிறுத்திவிட்டு, எங்களுக்கு எந்தத் தகவலுமில்லை... என்றவர், வெளியே போஸ்டர் ஒட்டியிருக்கிறோம் படித்துக் கொள்ளுங்கள் என்றார்.
சரி, வேறு அலுவலரைக் கேட்கலாம் என்று முடிவு செய்து போய்க் கேட்டோம். அவரோ சாதாரண செல்போன் அழைப்புக் கட்டண விவரங்கள் அடங்கிய ஒரு தாளைக் கையில் கொடுத்து, இதிலிருக்கு படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூசாமல் கொடுத்துவிட்டு போயே போய்விட்டார்.
வெறுத்துப் போய்விட்டது... சரி இந்த ஒரு அலுவலகம்தான் இப்படியா... அல்லது மற்ற அலுவலகங்களிலும் 3 ஜிக்கு வாடிக்கையாளர் சேவை லட்சணம் இதுதானா என்று அறிய கேகே நகர் இணைப்பகத்துக்கு ஒரு விசிட் அடித்தோம். அங்கே இருந்த பெண் ஊழியர், என்ன 3 ஜி விவரம் வேணுமா... இந்தாங்க என்று ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கையில் கொடுத்தார். ஏதும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. அந்தப் பிரசுரத்தில் 3 ஜி மொபைலின் மகாத்மியங்களை ஒரு வண்டி அளவுக்கு அடித்துத் தள்ளியிருந்தார்கள்.
ஆனால் எப்போது சர்வீஸ் கிடைக்கும், கட்டணம் எவ்வளவு, தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் எவ்வளவு, புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் என்ன... பிராட்பேண்ட் ஸ்பீட் என்ன... தொலைக்காட்சி சேவை முற்றிலும் இலவசமா அல்லது சேனலுக்கு இவ்வளவு என்று பாக்கெட்டில் கை வைப்பார்களா? ம்ஹூம்.. ஒரு தகவலுமில்லை.
பானையிலிருக்கிற எல்லா சோற்றையும் கொட்டியா பதம் பார்க்க முடியும்... அட போங்கப்பா... இது 3 ஜி இல்லை... மைனஸ் 3 ஜி !!
-
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications