நாவலாசிரியராக மாறிய 'செக்ஸ்' டாக்டர் பிரகாஷ்

Subscribe to Oneindia Tamil

Dr Parakash
சென்னை: ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு நாட்டை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய டாக்டர் பிரகாஷ், தற்போது சிறையில் ஞானோதயம் பெற்று நாவலாசிரியராக மாறி கதைகளாக எழுதித் தள்ளி வருகிறாராம்.

இளம் பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து அதை வீடியோ படமாக்கி அவற்றை இன்டர்நெட்டில் போட்டு சிக்கியவர் பிரகாஷ். இதுதவிர போதைப் பொருள் வழக்கும் அவர் மீது சுமத்தப்பட்டது.

ஆபாசப் பட வழக்கில் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது புழல் சிறையில் முதல் வகுப்பில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

எலும்பு முறிவு மருத்துவரான பிரகாஷ் தற்போது எழுத்தாளராகி விட்டார். தனது சிறை அறைக்குள் முடங்கிப் போய் விடாமல் கிரைம் நாவல்களாக எழுதி வருகிறாராம்.

இதுவரை 104 ஆங்கில, தமிழ் நாவல்கள் எழுதியுள்ளேன், இதற்காக 20 ஆயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதி வருகிறேன் என்கிறார் பிரகாஷ்.

வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நேற்று எழும்பூர் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோதுதான் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் டாக்டர் பிரகாஷ்.

மேலும் சிறை வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக கூறிய பிரகாஷ், தான் இப்போது ஒரு எழுத்தாளர் என்றும் முகம் மலர தெரிவித்தார்.

இதை விட முக்கியமாக மகாபாரத்தை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இவர் மொழிபெயர்த்துள்ளாராம்.

சிறைச்சாலையை கதைச் சோலையாக மாற்றிய பிரகாஷ் வித்தியாசமானவர்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+