Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெற்ற மகன்களை கொலை செய்த தந்தை கைது

Subscribe to Oneindia Tamil

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, பெற்ற குழந்தைகளையே கொலை செய்து இடுகாட்டில் புதைத்த கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை உளிமங்கலத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு ஜெகதீஷ் (4), விஷால்(2) என இரு மகன்கள் உள்ளனர்.

முனிராஜுக்கும், அவரது தந்தை முனியப்பாவுக்கும் நிலப் பங்கீடு தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், முனிராஜுக்கும், அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மகனை வீட்டை விட்டு வெளியேறும்படி, முனியப்பா வற்புறுத்தியுள்ளார்.

மனம் உடைந்த முனிராஜ், அருகில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி வந்து, அதில் பூச்சி மருந்து கலந்து தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.

இதில், விஷால் வாயில் நுரை தள்ளி சம்பவ இடத்திலேயே பலியானான். விஷம் அருந்தி உயிருக்கு போராடிய ஜெகதீஷை முனிராஜ் கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இறந்து போன இரு குழந்தைகள் உடல்களையும் அருகே இருந்த மயானத்திற்கு கொண்டு சென்று, குழி தோண்டி புதைத்தார்.

அதை பார்த்த அப் பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த முனிராஜை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+