For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஏரிகளில் நீர் இருப்பு குறைவு- குடிநீர் தட்டுப்பாடு வருமா?

By Staff
Google Oneindia Tamil News

Pulicat Lake
சென்னை: சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இதுவரை வந்துள்ள தண்ணீர் குறைவாகவே உள்ளது. எனினும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை குடிநீர் ஏரிகளில் தற்போது, 6 ஆயிரத்து 527 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் சென்னை குடிநீர் ஏரிகளில் 7 ஆயிரத்து 453 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.

பூண்டி ஏரியில் 1921 மில்லியன் கன அடி தண் ணீர் இருக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 3232 மில்லியன் கன அடியாகும். ஏரிக்கு தற்போது 523 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. தற்போதைய நீர் மட்டம் 13.16 அடி. இதன் மொத்த கொள்ளளவு 3330 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 1738 மில்லியன் கன அடி. நீர் வரத்து 98 கன அடி.

சோழவரம் ஏரியின் கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. தற்போதைய இருப்பு 592 மில்லியன் கன அடி. நீர் மட்டம் 13.63 அடி. மொத்த உயரம் 17.86 அடி. நீர்வரத்து 108 கன அடி.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி இப்போதைய இருப்பு 1605 மில்லியன் கன அடி. நீர் வரத்து 60 கன அடி. மொத்த உயரம் 24 அடி. தற்போதைய நீர்மட்டம் 15.40 அடி.

வீராணம் ஏரியில் 671 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி. ஏரிக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் மட்டம் 12.10 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 15.60 அடி.

கிருஷ்ணா தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து தற்போது 1500 கன அடி திறக்கப்படுகிறது. இந்த அணையில் 6.4 டி.எம்.சி. தண்ணீர் இருந்தாலே சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும். தற்போது இந்த அணையில் 26.76 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X