சீனா அத்துமீறல்: அலட்சியப்படுத்த முடியாது- சிங்
வாஷிங்டன்: சீனாவின் அத்துமீறல் அளவு கடந்துள்ளது. இதை புறக்கணிக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கோபமாக கூறியுள்ளர்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர், வாஷிங்டனில் நடந்த அமெரிக்க வெளியுறவு விவகார கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், சீனாவின் அத்துமீறல் புறக்கணிக்க கூடியதாக இல்லை.
சீனாவின் வளர்ச்சி கேலிக்குரியதாகும். இது ஜனநாயகமே இல்லாத ஒரு கட்டமைப்பை வைத்துக் கொண்டு சீனா பெற்ற வெற்றியாகும். அதேசமயம், இந்த கட்டமைப்பு, மனித உரிமைகளையும், பன்முக இனக் கூட்டங்களின் ஒருமைப்பாடு, பல்வேறு கலாச்சாரங்களின் உரிமைகள் ஆகியவற்றை மதித்ததில்லை.
சீனாவின் பக்கமிருந்து குறிப்பிட்ட அளவிலான அத்துமீறல்கள் இருந்து கொண்டுள்ளன. இதை மறுக்க முடியாது. இதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. ஆனால் இதை கவனித்தாக வேண்டும். புறக்கணிக்க முடியாது அத்துமீறல் இது என்றார் அவர்.
பிரதமர் மன்மோகன் சிங் சீனா குறித்து ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக சீனா, இந்தியாவைச் சீண்டும் வகையில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரதமர் விடுத்துள்ள இந்த கடுமையான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.