திமுக வேட்பாளர்கள்: திருச்செந்தூர்-அனிதா, வந்தவாசி-கமலக்கண்ணன்
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனும், வந்தவாசியில் கமலக்கண்ணனும் போட்டியிடுவர் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
வந்தவாசியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயராமன் வென்றார். அவர் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்தத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலக்கண்ணன் மறைந்த ஜெயராமனின் மகன் ஆவார்.
நாளை முதல் வேட்பு மனு தாக்கல்:
இந் நிலையில் இரு தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 2ம் தேதி.
மனுக்களை வாபஸ் பெற 5ம் தேதி கடைசி நாள். அன்றை வேட்பாளர்க பட்டியல் வெளியாகும். 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.












Click it and Unblock the Notifications