சென்னையில் மாவீரர் நாள்-நாம் தமிழர் இயக்கம் ஏற்பாடு
சென்னை: சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் நவம்பர் 27ம் தேதி சென்னையில் மாவீரர் தினத்தைக் கடைப்பிடிக்கவுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்கள் இனம் காத்த எங்கள் குல மாவீரர்களின் நினைவை போற்றும் நாள்.
இடம்: கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபம், 80 அடி சாலை, சாலிகிராமம், வடபழனி, (ஆவிச்சி பேருந்து நிறுத்தம்) சென்னை.
நாள்: 27.11.2009 நேரம்: மாலை 5.00 மணி.
நாம் தமிழர் இயக்க சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான் தலைமை வகிப்பார்.
அனைத்து தமிழ் உறவுகளும் தவறாமல் கலந்து கொண்டு நம் இனம் காத்த மாவீரர்கள் நினைவை போற்றுமாறு கேட்டுகொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் சீமான்..
இதற்கிடையே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட கனடா சென்றுள்ளார் சீமான்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர் 26. அவரது பிறந்தநாளை கொண்டாட இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத்தின் அமைப்பாளருமான சீமான் கனடா சென்றுள்ளார்.
டொரன்டோ சென்ற அவரை விமான நிலையத்தில் தமிழர்கள் பலர் திரளாக வந்து வரவேற்றனர்.
பிரபாகரனை வாழ்த்தி போஸ்டர்கள்..
இதற்கிடையே, பிரபாகரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications