புதிய மீன்பிடி சட்டம் தேவையற்றது- ராமதாஸ்
சென்னை: மத்திய அரசு புதிதாக கொண்டுவரும் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம் மீனவர்கள் வாழ்வுரிமைக்கு எதிரானது. எனவே இதை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி மிகக் கடுமையான கட்டுப்பாடுகளையும், கடுமையான தண்டனையும் கொண்ட, நமது மீனவர்களை அச்சுறுத்துகிற வகையில் ஒரு கறுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிடுகிறது. இது தேவையற்றது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தகுந்த திருத்தங்களுடன் அதனை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தலாம் என்ற முயற்சியை கைவிட்டு, அந்த சட்ட முன்வடிவை முற்றிலுமாக திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
12 கடல் மைல்களுக்கு அப்பால் அனுமதியின்றி செல்லக்கூடாது என்றும், அப்படி சென்று மீன்பிடித்தால், 9 லட்ச ரூபாய் வரை அபராதம், அத்துடன் சிறைத்தண்டனை என்பன உள்ளிட்ட கடுமையான பிரிவுகளைக் கொண்ட இந்த சட்டம், மீனவர்களின் தொழில் சுதந்திரத்தை பறித்துவிடும்.
தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கையின் நிர்ப்பந்தம் காரணமாக, தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் முன்பு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. அதன் பலனை தமிழக மீனவர்கள் இன்று அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.
பாக் ஜலசந்தி பகுதியில் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்து வந்த உரிமையை நமது மீனவர்கள் இழந்து தவிக்கிறார்கள். பெரும் துன்பத்திற்கும், பொருளாதார இழப்பிற்கும் ஆளாகி வருகிறார்கள். இத்தகைய நிலையில், இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து, 12 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது நமது மீனவர்களின் நலனுக்கு முற்றிலுமாக எதிரானது மட்டுமின்றி நடைமுறை சாத்தியமற்றது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications