தேவநாதனுடன் உல்லாசம்- நர்ஸ், 2 ஆசிரியைகள் காஞ்சியை விட்டு ஓட்டம்

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையை கிட்டத்தட்ட லாட்ஜ் ஆக மாற்றி அசிங்கப்படுத்திய அர்ச்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்களையும் தற்போது போலீஸார் வளைத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் குறித்த பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணை ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது. யார் யார் அந்தப் பெண்கள் என்ற விவரம் வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது.
இருப்பினும் இந்தப் பட்டியலில் சில விஐபி வீட்டுப் பெண்கள் இருப்பதாக செய்தி கசிந்தது.
இந்தப் பட்டியலில் ஐந்து குடும்பப் பெண்கள், ஒரு நர்ஸ், 2 விபச்சார அழகிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 5 குடும்பப் பெண்களில் இருவர் ஆசிரியைகளாம்.
சம்பந்தப்பட்ட நர்ஸ், காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான கண் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாராம்.
இவர்களிடம் விசாரிக்க போலீஸ் படை விரைந்தது. ஆனால் நர்ஸும், 2 ஆசிரியைகளும் வீட்டையே காலி செய்து விட்டு காஞ்சிபுரத்தை விட்டே வெளியேறி விட்டது தெரிய வந்துள்ளது. இந்த மூன்று பெண்களும் குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளனர்.
தற்போது நர்ஸு்ம், தேவநாதனும் செய்த லீலை காட்சிகள் அடங்கிய சிடி படு வேகமாக விற்பனையாகி வருகிறதாம்.
நர்ஸுடன் தேவநாதன் செய்த காரியங்களைப் பார்க்கும்போது கோவிலை எவ்வளவு கேவலமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது. அந்த அளவுக்கு தேவநாதனும், அந்த நர்ஸும் நடந்து கொண்டுள்ளனர்.
அதேபோல ஒரு விபச்சார அழகியை கருவறைக்குள் கூட்டிச் சென்று உல்லாசமாக இருக்கிறார் தேவநாதன். காரியத்தை முடித்ததும் அவருக்குப் பணம் கொடுக்கிறார். அதை வாங்கி தனது ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்கிறார் அப்பெண்.
மடப்பள்ளியில் அசிங்கம்...
அதேபோல, கோவில் மடப்பள்ளியில் ஒரு கட்டிலில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறார் தேவநாதன். இந்த சிடியும் படு வேகமாக உலா வந்து கொண்டுள்ளதாம்.
கோவிலை மகா கேவலமாக பயன்படுத்திய தேவநாதனை மட்டும் தண்டிக்காமல், அவரது இந்த அசிங்கமான செய்கைகளுக்கு உடந்தையாக இருந்த அத்தனை பெண்களையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என பக்தர்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்களைக் கைது செய்வது குறித்து போலீஸார் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி...
இதற்கிடையே, தேவநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் சுதா தள்ளுபடி செய்து விட்டார்.
இதையடுத்து மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வோம் என்று தேவநாதனின் வக்கீல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications