பாபர் மசூதி வழக்கு-ஆரம்பித்து வைத்த ஷேக்!
லக்னோ: பாபர் மசூதி தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்தவர் ஹாஜி ஷேக் என்பவர்தான். இன்று அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார் அவரது மகன் ஹாஜி மகபூப்.
1949ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாபர் மசூதியின் கதவுகளை உடைத்து சிலர் உள்ளே புகுந்து ராமர் சிலையை வைக்க முயன்றனர். இதையடுத்து ஹாஜி ஷேக் போலீஸில் புகார் கொடுத்தார். அதுதான் பாபர் மசூதி தொடர்பாக தொடரப்பட்ட முதல் வழக்காகும்.
ஷேக்குவின் மறைவுக்குப் பின்னர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார் அவரது மகன் மகபூப்.
லிபரான் கமிஷன் அறிக்கை குறித்து மகபூப் கருத்து தெரிவிக்கையில், இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.
பாபர் மசூதி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நான்கு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரேபரேலி, லக்னோ கோர்ட்டுகளில் தலா ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகின்றன.
வழக்கு தொடர்பாக வாரத்திற்கு மூன்று முறை அயோத்திக்கும், லக்னோவுக்கும் நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடந்த வன்முறையில் எனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் எனது குடும்பம் சிதறிப் போனது, மனதொடிந்து போனேன். நானே கூட நான்கு முறை இதுவரை உயிர் தப்பியுள்ளேன்.
ஒவ்வொரு முறையும் நான் லக்னோ செல்லும்போது எனக்கு மிரட்டல் விடுக்கப்படும். இது வழக்கமாகி விட்டது. இதை நான் இப்போதெல்லாம் பெரிதுபடுத்துவதில்லை என்கிறார் மகபூப்.
இதேபோல பாபர் மசூதிக்காக தொடர்ந்து சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கும் இன்னொரு முதியவர் ஹாசிம் அன்சாரி. இவருக்கு வயது 90. பாபர் மசூதி தொடர்பாக தொடரப்பட்ட இன்னொரு வழக்கை முதன் முதலாக தொடர்ந்தவர் இவர்.
தற்போது மெக்காவுக்கு புனித யாத்திரை போயிருக்கிறாராம் அன்சாரி.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications