முகாம்களில் இன்னும் 1,50,000 தமிழர்கள்: ஐ.நா
நியூயார்க்: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இன்னும் 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான விவகாரத் துறை தலைவர் ஜான் ஹோம்ஸ் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இன்னும் 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் அடைபட்டுள்ளனர். மறு குடியேற்ற நடவடிக்கைகளில் சில பகுதிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.
முகாம்களை விட்டு சுதந்திரமாக மக்கள் நடமாடக் கூடிய நிலை ஏற்பட்டால், அது விரைவான மறு குடியேற்றத்துக்கு வழி வகுக்கும். ஆனால் தற்போது முகாம்களிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும், தங்களது பெயர், விவரங்கள், செல்லும் இடத்தைப் பதிவு செய்து விட்டு தமிழர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இது நிரந்தரமான சுதந்திரமாக இல்லை.
முகாம்களிருந்து சொந்த வீடுகளுக்குச் செல்லும் மக்களுக்கு இந்திய அரசு கொட்டாய்கள் அமைக்க உதவி செய்கிறது. மேலும், ஐ.நாவிடமிருந்து 25,000 ரூபாய் நிதியுதயும் கிடைக்கிறது. இது மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும் என்றார் ஹோம்ஸ்.












Click it and Unblock the Notifications