Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவநாதனை மேலும் 3 நாள் போலீஸ் காவல்

Subscribe to Oneindia Tamil

Devanathan
காஞ்சிபுரம்: கோவில் கருவறைக்குள் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு காஞ்சிபுரம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மச்சேஸ்ரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக கைதாகியுள்ளார் தேவநாதன். ஏற்கனவே இவரை 2 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்தது.

இந்த நிலையில் மீண்டும் அவரை விசாரிக்க முடிவு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது காவல்துறை.

இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று நீதிபதி சி.டி. செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேவநாதனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து இந்த முறை தேவநாதனிடமிருந்து கூடுதல் தகவல்களைக் கறக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

அசிங்கத்திற்குத் துணை போன பூக்காரி...

இதற்கிடையே, தேவநாதனின் செக்ஸ் ஊழலுக்கு ஒரு பூக்காரப் பெண் துணை போயுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது.

அந்தப் பூக்காரப் பெண்ணைப் பிடித்து போலீஸார் தேவநாதனின் காம லீலைகள் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளனர்.

பூக்காரப் பெண்ணின் கணக்குப்படி கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் அசிங்கமாக நடந்துள்ளார் தேவநாதன் என்று தெரிய வந்துள்ளது.

பூக்காரப் பெண்ணை இந்த வழக்கில் ஒரு அரசு தரப்பு சாட்சியாக சேர்க்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மாணவியிடம் அசிங்கம்...

இதற்கிடையே, தேவநாதனின் சில்மிஷத்திற்கு 10வது வகுப்பு மாணவி ஒருவரும் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த 10ம் வகுப்பு மாணவி தினசரி மச்சேஸ்வரர் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அவரிடம் நாசூக்காக பேச்சு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் தேவநாதன்.

பின்னர் கோவில் கருவறைக்குள் கண்களை மூடி மந்திரம் ஜெபித்தால் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம் என்று கூறி கருவறைக்குள் கூட்டிச் சென்று அவரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காட்சியும் தேவநாதனின் காம லீலை வீடியோக் காட்சிகளில் இடம் பெற்றுள்ளதாம்.

மனைவியையும் ஆபாசமாக படம் பிடித்தாரா...?

இதற்கிடையே, தனது மனைவி கங்காவையும் ஆபாச கோலத்தில் தேவநாதன் படம் பிடித்து வைத்திருப்பதாக ஒரு தகவல் போலீஸாரை எட்டியுள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணைப் படலத்தை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+