அலட்சியமாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார் கசாப் வக்கீல்
மும்பை: அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலம் குறித்து அலட்சியமாக பேசியதற்காக கசாப்பின் வக்கீல் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவரது வக்கீல் பதவி தப்பியுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் குறித்து குறுக்கு விசாரணை செய்கிறீர்களா என்று நீதிபதி தஹிளியானி, கசாப்பின் வக்கீல் அப்பாஸ் கஸ்மியிடம் கேட்டார்.
அதற்கு அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை. முதலில் தாக்கல் செய்யட்டும். பிறகு பார்க்கலாம் என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி, இப்படி தவறான நடத்தைக்காகவும், அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவும் உங்களை வக்கீல் பணியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு அப்பாஸுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நேற்று தெரிவித்தார் அப்பாஸ் கஸ்மி. இதுகுறித்து நீதிபதியிடம் கஸ்மி கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வழக்கு. குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக நான் வாதாடி வருகிறேன். நேற்று நடந்தது, ஏதோ கோபத்தில் நடந்து விட்டது. இதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து தனது நோட்டீஸ் உத்தரவை திரும்பப் பெறுவதாக கூறிய நீதிபதி, கஸ்மியை பொய்யர் என்று கூறியதையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications