நாளை சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்

Subscribe to Oneindia Tamil

Chandrasekhara Rao
சங்காரெட்டி (ஆந்திரா): தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நாளை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.

மேடக் மாவட்டத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது. இதுகுறித்து அவர் சங்காரெட்டி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதான் தெலுங்கானாவை அடைய நாங்கள் நடத்தப் போகும் கடைசிப் போராட்டமாகும். சித்திப்பேட்டை என்ற இடத்தில் நான் உண்ணாவிரதம் தொடங்குகிறேன்.

எங்களது போராட்டத்திற்கு பல்வேறு தெலுங்கானா அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளோம் என்றார்.

முன்னதாக தனது போராட்டம் வெற்றி பெற வேண்டும் கரீம் நகரில் சிறப்புப் பூஜைகளை நடத்தினார் சந்திரசேகர ராவ்.

சி்த்திப்பேட்டை போராட்டத்தி்ல ராவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தால் வன்முறை வெடிக்கலாம் என மாநில அரசு அஞ்சுகிறது. இதையடுத்து சித்திப்பேட்டையில் 6000 போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+