ராஜசேகர ரெட்டி தொகுதியில் மனைவி போட்டியிடலாம்
ஹைதராபாத்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் புலிவெந்துலா சட்டசபைத் தொகுதியில், அவரது மனைவி விஜயலட்சுமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ராஜசேகர ரெட்டியின் தம்பியும், எம்.பியுமான விவேகானந்த ரெட்டி கூறுகையில், புலிவெந்துலா தொகுதியில் விஜயலட்சுமி போட்டியிடுவார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
தேர்தலில் போட்டிய விஜயலட்சுமி தயக்கம் காட்டியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இடைத் தேர்தலில் அவர்தான் போட்டியிடுகிறார் என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கூறுகையில், நவம்பர் 30ம் தேதி விஜயலட்சு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிவித்தனர். டிசம்பர் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
விஜயலட்சுமி தேர்தலில் போட்டியிட்டால், புலிவெந்துலா தொகுதியில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல், விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications