காங்கோ படகு விபத்தில் 90 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

காங்கோவில் உள்ள மாய் டோம்பே என்ற ஏரியில் வந்தபோது இந்தப் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்தப் படகில் 300 பேர் வரை இருந்தனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
முதலில் 70 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. ஆதரவு ரேடியோ தெரிவித்துள்ளது.
இந்த படகு சரக்கு ஏற்றிச் செல்லக் கூடியது. ஆனால் முறைகேடாக பயணிகளை அதிலும் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து உடல்களையும் படகுக்குள் சிக்கித் தவிப்பவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.
காங்கோ நாட்டு மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பெரும்பாலும் படகு பயணத்தையே மேற்கொள்கிறார்கள். அங்கு சாலை வசதி 300 மைல் மட்டுமே உள்ளது. இதனால் படகு போக்குவரத்து மிக முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications