For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே 16க்குள் நடக்கும் பிளஸ்1 மாணவர் சேர்க்கை செல்லாது!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் மே 16ம் தேதி்க்கு முன்னதாக ​11ம் வகுப்பு மாண​வர் சேர்க்கை நடத்தக்கூடாது. மீறி நடத்தப்படும் மாணவர் சேர்க்கை செல்​லாது என்று மெட்​ரிககுலேஷன் கல்வி இயக்​கு​னர் உத்​த​ர​விட்​டுள்​ளார்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே மற்​றும் ஜூன் மாதத்துக்கு இடையே நடை​பெ​று​வ​து முன்பு வழக்​கமாக இருந்தது. ஆனால், ஏராளமான பள்​ளி​கள் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை நவம்​பர்,​ டிசம்​பர் மாதங்​க​ளிலேயே தொடங்கிவிடுகின்றன. இதன் மூலம் அதிக அள​வில் பணமும் வசூ​லிக்​கப்​ப​டுகிறது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனக்கூறி முதல் கட்டத்திலும், சேர்க்கை எல்லாம் முடிந்துவிட்டது என மற்றொரு கட்டத்திலும் கூறி, மறைமுக பேரத்தின் மூலம் பள்ளிகள் பணம் வசூல் செய்துவருகின்றன. இந்நிலையில், பிளஸ்1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மட்டும் மெட்ரிகுலேஷன் இயக்குனர் கெடு விதித்து எச்சரித்துள்ளார்.

இதுதொடர்​பாக மெட்​ரிக் பள்ளி இயக்​குனர் வெளியிட்டுள்ள உத்தரவில், பல பள்​ளி​க​ளில் மாண​வர்​க​ளின் 10ம் வகுப்பு அரை​யாண்​டுத் தேர்வு மதிப்​பெண்ணை வைத்து,​ மார்ச் மாதத்​துக்கு முன்​ன​தா​கவே பிளஸ்1 மாண​வர் சேர்க்​கையை முடித்​து​வி​டுவதாக புகார்கள் வருகின்றன.

பிளஸ்1 மாண​வர் சேர்க்​கையை 10ம் வகுப்​புத் தேர்வு முடிவு வெளி​யாகி 15 நாட்க​ளுக்​குள் தான் முடிக்க வேண்​டும். மே 16ம் தேதிக்கு முன்​னர் நடை​பெ​றும் மாண​வர் சேர்க்கை செல்​லாது.

மா​ண​வர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் ஒவ்​வொரு மாண​வ​ருக்​கும் வழங்​கப்​பட வேண்​டும். தவிர,​ மாண​வர் சேர்க்கை தொடர்​பாக மாண​வர்,​ பெற்​றோ​ரி​டம் நேர்​கா​ணல் எதை​யும் நடத்​தக் கூடாது.

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாண​வர்​க​ளை​யும் 11ம் வகுப்​பில் சேர்த்​துக் கொள்ள வேண்​டும். அந்​தந்த மாவட்ட முதன்மை கல்வி அலு​வ​லர்​கள் தங்​கள் பகு​தி​க​ளில் உள்ள மெட்​ரிக் பள்​ளி​க​ளின் மாண​வர் சேர்க்​கையை முழு​மை​யா​கக் கண்​கா​ணிக்க வேண்​டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக 871 உயர்நிலைப்பள்ளிகள்:

தமி​ழ்நாடு உட்​பட 7 மாநி​லங்​க​ளில் 871 புதிய உயர்​நி​லைப் பள்​ளி​களை அமைக்க மத்​திய அரசு அனு​மதி அளித்​துள்​ளது.

தமிழ்​நாடு,​ ​ கேர​ளம்,​ சத்​தீஸ்​கர்,​ ராஜஸ்​தான்,​ மிசோ​ரம்,​ பஞ்​சாப்,​ உத்​த​ரப் பிர​தே​சம் ஆகி​ய மாநிலங்களில் இந்த புதிய பள்ளிகள் துவக்க மொத்த தொகையான ரூ.652 கோடி​யில், ரூ.489 கோடியை மத்​திய அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ளது.

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பள்ளிகள் என்பது கல்வியறிவு விகிதப்படி கணக்கிட்டு விரைவில் அறிவிக்கப்படும். பு​திய பள்​ளி​க​ளுக்​காக சுமார் 1.27 லட்​சம் ஆசி​ரி​யர்​க​ளுக்கு பயிற்சி அளிக்​கப்​பட உள்​ளது. ஏற்​கெ​னவே உள்ள 20 ஆயி​ரம் பள்​ளி​க​ளில் நூல​கம் மற்​றும் ஆய்​வுக் கூடங்​கள் அமைப்​ப​தற்​கும் நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X