For Daily Alerts
Just In
பழையை தேர்தல் அறிக்கையை தூசி தட்டி விரிவாக்கித் தர ராஜபக்சே முடிவு!
கொழும்பு: கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையையே தூசி தட்டி எடுத்து அதில் கொஞ்சம் மாற்றி புதிய அறிக்கையாக தரப்போகிறாராம் அதிபர் ராஜபக்சே.
கடந்த அதிபர் தேர்தலில் மகிந்தா சிந்தனைகள் என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை அளித்தார் ராஜபக்சே. அதையே இப்போது விரிவாக்கி புதிய அறிக்கையாகத் தரப் போகிறாராம்.
இதுகுறித்து ராஜபக்சே அரசில் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் டல்லாஸ் அழகப்பெருமா கூறுகையில், டிசம்பர் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னர் அதிபரின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
பழைய தேர்தல் அறிக்கையேயே தர ராஜபக்சே முடிவு செய்திருப்பதைப் பார்க்கும்போது அவரிடம் புதிய 'சிந்தனை' எதுவும் இல்லை என்று தெரிகிறது.
Comments
Story first published: Tuesday, December 1, 2009, 14:24 [IST]