மும்பையில் ரூ. 211 கோடிக்கு விலை போன அலுவலக வளாகம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்த ஆண்டின் மிகப் பெரிய இட விற்பனை என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு, மும்பையைச் சேர்ந்த ருஸ்தோம்ஜி என்ற டெவலப்பர் நிறுவனம், 1.42 லட்சம் சதுர அடி கொண்ட அலுவலக வளாகத்தை ரூ. 211 கோடிக்கு விற்று சாதனை படைத்துள்ளது.
இந்த பிரமாண்ட விலை கொடுத்து அந்த இடத்தை வாங்கியிருப்பது எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனமாகும்.
மும்பை அந்தேரியில்தான் இந்த சாதனை விற்பனை நடந்துள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் செவ்வாயாக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது.
விற்பனையாகியுள்ள இடம், மேற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாக கட்டடம் கிரீன் பில்டிங் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ருஸ்தோம்ஜியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த 3 முதல் நான்கு மாதங்களாக இந்த வணிக வளாக விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications