செல்போனை எடுப்பதே இல்லை - கரூர் அதிமுக எம்.எல்.ஏ மீது புகார் மழை
தமிழக சட்டசபையின் இளம் எம்.எல்.ஏக்களில் ஒருவர் கரூர் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. இவர் கரூர் அதிமுக மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.
இவர் தேர்தலில் போட்டியிடும் போது பொது மக்களிடம் சென்று உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் உடனே தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி டெலி போன் டைரியை ஒவ்வொரு வார்டு வாரியாக கொடுத்து வந்தார்.
ஆனால் அவர் கொடுத்துள்ள எந்த எண்ணைத் தொடர்பு கொண்டாலும் செல் போனை எடுத்து பேசுவதே கிடையாதாம். நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக செய்தி வருகிறது அல்லது போன் ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய முயற்சி செய்யும் போதும் இவர் செல்போனை எடுப்பதே இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தங்களது பகுதி பிரச்சனைகளின் போது தாங்கள் உடனடியாக செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி தவிப்பதாக கூறுகின்றனர். இது குறித்து அதிமுக தலைமைக்கும் , போயஸ் கார்டனுக்கும் புகார்கள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.