For Daily Alerts
Just In
திருச்செந்தூர் இடைத் தேர்தல் - பார்வையாளர் நியமனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையப் பார்வையாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தர், வந்தவாசி தொகுதிகளுக்கு டிசம்பர் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது.
இந்த நிலையில் திருச்செந்தூர் தொகுதிக்கான பார்வையாளராக வி.பி. மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
Story first published: Wednesday, December 2, 2009, 14:57 [IST]