தேவநாதன் லீலையில் டிவி நடிகை-பரபரப்பு!
தேவநாதனிடம் இதுவரை போலீஸார் நடத்திய விசாரணையில் அவருக்கு 21 பெண்களுடன் அசிங்க உறவு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பெண்களில் பலரிடமும் போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
நர்ஸ் ஆசிரியைகள், பேராசிரியர் மனைவி, டாக்டர் மனைவி, தொழிலதிபர்களின் மனைவிகள் என சகல தரப்புப் பெண்களும் தேவநாதனுடன் தொடர்பு கொண்டுள்ளனராம்.
இவர்களில் பேராசிரியரின் மனைவி மட்டுமே நடந்ததை ஒப்புக் கொண்டு முறையாக வாக்குமூலம் அளித்துள்ளாராம். மற்றவர்கள் சரிவர வாக்குமூலம் தரவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் தேவநாதனின் அசிங்கத்திற்குத் துணை போன தற்போது போலீஸ் தரப்பு சாட்சியமாக மாறியுள்ள பூக்காரப் பெண்ணின் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்யவுள்ளனர். இந்தப் பெண் தரப் போகும் வாக்குமூலம்தான் தேவநாதனுக்கு எதிரான அசைக்க முடியாத கிடுக்கிப் பிடியாக இருக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் டிவி நடிகை ஒருவரும் தேவநாதனின் காம லீலையில் தொடர்பு கொண்டிருப்பதாக புதுத் தகவல் கிடைத்துள்ளது.
இவரும், தேவநாதனும் ஜாலியாக இருப்பது போன்ற சிடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி இந்தக் கோவிலுக்கு அந்த நடிகை வருவாராம். அப்போது தொடர்பு ஏற்பட்டு அசிங்கச் செயலில் ஈடுபட்டுள்ளனராம்.
தற்போது இந்தநடிகையும், தேவநாதனும் ஜாலியாக இருக்கும் சிடிக்கள் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் படு ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறதாம்.
இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் போயுள்ளது. அதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ளதாம் காவல்துறை.
தற்போது மாவட்ட குற்றப் பிரிவு வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு குறித்த கோப்புகள் இன்னும் வந்து சேராததால் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்காமல் உள்ளனர்.