செல்போன் அடையாள எண் பெற முண்டியடிக்கும் கூட்டம்!
நம்நாட்டில் அரசின் அனுமதி பெற்று விற்கப்படும் செல்போன்கள் அனைத்திலும் ஐ.எம்.இ.ஐ. என்று சொல்லக்கூடிய அடையாள குறியீட்டு எண் கள் உள்ளன. இந்த எண்கள் உள்ள போன்கள் திருட்டு போனாலோ அல்லது இந்த மொபைல்களிலிருந்து வரும் அழைப்புகள் குறித்தோ எளிதில் கண்டு பிடித்து விட முடியும்.
தீவிரவாதிகள் இதை சட்ட விரோத காரியங்களுக்கு பயன்படுத்தும்போது எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால் அரசு அனுமதி பெறாத, சீனா, கொரியா செல்போன்களில் இதுபோன்ற அடையாள எண்கள் இல்லை. சமீப காலமாக ஐ.எம்.இ.ஐ. எண்களுடன் சீனா மொபைல்கள் சில வந்துள்ளன. ஆனால் அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை போலி என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் அடையாள குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் செயல் இழக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி ஒரு பகுதி செல்போன்கள் செயலிழக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் ஐ.எம்.இ.ஐ. அடையாள குறியீட்டு எண் வழங்கும் செல்போன் கடைகளை முற்றுகையிட்டனர். கடந்த 2 நாட்களாக அக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு ரூ.199 கட்டணம் செலுத்தி ஐ.எம்.இ.ஐ. எண்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் வந்து தான் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். இந்த அடையாள எண்களை டெல்லியில் இருந்து செல்போன் டீலர்கள் பெறுகிறார்களாம்.
வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை காட்டி ரூ.199 கட்டணம் செலுத்தி ஐ.எம்.இ.ஐ. எண் பெற்றுக் கொள்ளலாம்.
சீனா, கொரியன் செட் வைத்திருப்பவர்கள் 57886 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதில் நாட் வேலிட் என்ற பதில் வந்தால், உடனே 199 செலுத்தி அடையாள எண் பெறலாம்.