ரூ 16க்கு அரிசி வாங்கி ஒரு ரூபாய்க்கு விற்கும் தமிழகம்!
சென்னை: மத்திய அரசிடம் ரூ 16-க்கு அரிசியை வாங்கி ஒரு ரூபாய்க்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குகிறது தமிழக அரசு. இதனால் அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது.
அரசியலுக்காக செய்யப்பட்டும் இந்த செலவால், மாநிலத்தில் பிற திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்துக்கு அரிசிக்கு தேவை அதிகமாகவும், சப்ளை குறைவாகவும் உள்ள நிலையில், மத்திய அரசிடம் வெளிச்சந்தை விலைக்கே அரசியைக் கேட்கிறது தமிழக அரசு.
இதன்படி ஒரு கிலோ ரூ.16 என்ற விலைக்கு மத்திய அரசிடம் அரிசியைப் பெறுகிறது தமிழகம்.
ஏற்கெனவே இதுகுறித்த கோரிக்கையை மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தது தமிழகம். அதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழகம் கோரிய கூடுதல் அரிசியை தர ஒப்புக் கொண்டதாகவும், அதற்கான பதிலை தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை, எனவும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் மக்களவையில் செவ்வாய்க்ழமை கூறியது நினைவிருக்கலாம். எனவே தனது சம்மதக் கடிதத்தை இப்போது தமிழக அரசு அளிக்க உள்ளது.
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் ஒருமாத தேவையின் அளவு 2.55 லட்சம் டன்கள். ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் அரிசியின் அளவு 2.3 லட்சம் டன்தான். எனவே இது தேவையின் அளவை விட 25 ஆயிரம் மெட்ரிக் டன் குறைவாகும்.
மத்திய அரசு வழங்கும் 2.3 லட்சம் டன்னில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு என கிலோ ரூ.5.65ல், 1.04 லட்சம் டன் அரிசியும்,
வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு கிலோ ரூ.8.30 என்ற அளவில் 1.26 லட்ம் டன் அரிசியையும் மத்திய அரசு தருகிறது.
இந்த அரிசியைகத்தான் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் வழங்கி வருகிறது. கூடுதல் அரிசித் தேவை இருந்தால், அதை வெளிச் சந்தை விலைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து தனக்கு தேவையான 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ 16 என வாங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளது. உண்மையில் இதை கிலோவுக்கு ரூ.18 என்ற அளவில் மத்திய அரசு விற்கச் சொல்கிறது.
ஆனால் கிலோவுக்கு ரூ 15 நஷ்டத்துக்கு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசியை தமிழக அரசு தருவதால், கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது.
இந்த அளவு விலைக்கு வேறு எந்த மாநிலமும் மத்திய அரசிடம் அரிசி வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications