ரூ 16க்கு அரிசி வாங்கி ஒரு ரூபாய்க்கு விற்கும் தமிழகம்!
சென்னை: மத்திய அரசிடம் ரூ 16-க்கு அரிசியை வாங்கி ஒரு ரூபாய்க்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குகிறது தமிழக அரசு. இதனால் அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது.
அரசியலுக்காக செய்யப்பட்டும் இந்த செலவால், மாநிலத்தில் பிற திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்துக்கு அரிசிக்கு தேவை அதிகமாகவும், சப்ளை குறைவாகவும் உள்ள நிலையில், மத்திய அரசிடம் வெளிச்சந்தை விலைக்கே அரசியைக் கேட்கிறது தமிழக அரசு.
இதன்படி ஒரு கிலோ ரூ.16 என்ற விலைக்கு மத்திய அரசிடம் அரிசியைப் பெறுகிறது தமிழகம்.
ஏற்கெனவே இதுகுறித்த கோரிக்கையை மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தது தமிழகம். அதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழகம் கோரிய கூடுதல் அரிசியை தர ஒப்புக் கொண்டதாகவும், அதற்கான பதிலை தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை, எனவும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் மக்களவையில் செவ்வாய்க்ழமை கூறியது நினைவிருக்கலாம். எனவே தனது சம்மதக் கடிதத்தை இப்போது தமிழக அரசு அளிக்க உள்ளது.
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் ஒருமாத தேவையின் அளவு 2.55 லட்சம் டன்கள். ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் அரிசியின் அளவு 2.3 லட்சம் டன்தான். எனவே இது தேவையின் அளவை விட 25 ஆயிரம் மெட்ரிக் டன் குறைவாகும்.
மத்திய அரசு வழங்கும் 2.3 லட்சம் டன்னில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு என கிலோ ரூ.5.65ல், 1.04 லட்சம் டன் அரிசியும்,
வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு கிலோ ரூ.8.30 என்ற அளவில் 1.26 லட்ம் டன் அரிசியையும் மத்திய அரசு தருகிறது.
இந்த அரிசியைகத்தான் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு நியாய விலைக் கடைகளில் வழங்கி வருகிறது. கூடுதல் அரிசித் தேவை இருந்தால், அதை வெளிச் சந்தை விலைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து தனக்கு தேவையான 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ 16 என வாங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளது. உண்மையில் இதை கிலோவுக்கு ரூ.18 என்ற அளவில் மத்திய அரசு விற்கச் சொல்கிறது.
ஆனால் கிலோவுக்கு ரூ 15 நஷ்டத்துக்கு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசியை தமிழக அரசு தருவதால், கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது.
இந்த அளவு விலைக்கு வேறு எந்த மாநிலமும் மத்திய அரசிடம் அரிசி வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications