For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிதம்பரம் வாலிபர் பக்​ரைனில்​ படுகொலை- உடலை மீட்க எம்.பி கடி​தம்

By Staff
Google Oneindia Tamil News

சிதம்​ப​ரம்: பக்​ரைன் நாட்​டில் கொலை செய்​யப்பட்ட சிதம்​ப​ரம் வாலி​பரின் உட​லைக் கொண்டு வர ஏற்​பாடு செய்​யு​மாறு உள்​து​றைச் செய​லா​ள​ருக்கு கட​லூர் எம்.பி கே.எஸ்.அழ​கிரி கடி​தம் அனுப்​பி​யுள்​ளார்.

சி​தம்​ப​ரம் அருகே சி.முட்​லூர் அம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சொக்க​லிங்​கத்​தின் மகன் ராஜ்​மோ​கன் ​(25). கடந்த இரண்டு ஆண்​டு​க​ளாக பக்​ரைன் நாட்​டில் மொராக் நக​ரத்​தில் தினக்கூ​லி​யாக வேலைசெய்து வந்​தார்.

பக்​ரைன் நாட்​டில் தமி​ழர்​களை மிரட்டி பணம் பறிக்​கும் கும்​பல் பணத்தை பறிக்​கும் நோக்​கத்​தில் ராஜ்​மோ​கனை கடந்த வாரம் கழுத்தை அறுத்து கொலை ​செய்​ததாக தகவல் கிடைத்துள்ளது.

ராஜ்மோகன் எங்கு, எந்த நிலையில் கொல்லப்பட்டார் என்ற தகவல் கிடைக்காததால், அவரின் குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் அவரின் உடலையாவது மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர உதவுமாறு ராஜ்மோகனின் உறவினர்கள் கோரிக்கை விடு்த்தனர்.

இதன்பேரில் ராஜ்மோகனின் உட​லை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்​பாடு செய்​யு​மாறு மத்திய உள்​து​றைச் செய​லா​ள​ருக்கு கட​லூர் எம்.பி கே.எஸ்.அழ​கிரி கடி​தம் அனுப்​பி​யுள்​ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X