டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் ஒன் பிரிவுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஈரோட்டை சேர்ந்த வேலுச்சாமி உள்ளிட்ட 3 பேர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
2006-07 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வினை எழுதினோம். இதில் காத்திருப்போர் பட்டியலில் நாங்கள் இடம் பெற்றோம். அதன் பின்னர் தேர்வில் நடந்த முறைகேடுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் முடிவில் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து 2006-07 ஆம் ஆண்டுக்கான 172 குரூப் 1 பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் பெரும்பாலான பணியிடங்களில் தேர்வான நபர்கள் சேரவில்லை. இதனால் காலி பணியிடங்கள் உருவாகி உள்ளன.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறையும் தேர்வாணையத்திற்கு காலி பணியிடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. காலி பணியிடங்கள் ஏற்பட்டால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை பணி நியமனத்திற்கு அழைக்க வேண்டும். ஆனால் இதுவரை தேர்வாணையம் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் 2008-09ம் ஆண்டுக்கான குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வு நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டால் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ள நாங்கள் பாதிக்கப்படுவோம்.
எனவே 2006-07 ம் ஆண்டுக்கான குரூப் 1 பணியிடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள எங்களை நியமிக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
அதுவரை 200809 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன், 2008-09 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வில் நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும், டிசம்பர் 9ந் தேதிக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications