இந்திய ராணுவ கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் சீனா ஊடுறுவல்!

ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னா என்ற இடத்தில் வடகிழக்குப் பிராந்திய பாதுகாப்பை மேற்கொள்ளும் ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது.
இங்குள்ள கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள்தான் சீனா ஊடுறுவியுள்ளது.
இங்குள்ள கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை சீனாவில் இருந்தபடி சுட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
சீனாவின் உளவு சாப்ட்வேரை இந்திய ராணுவ கட்டமைப்புக்குள் ஊடுருவ வைத்ததில் சீனாவுக்கு இந்திய ராணுவத்தில் யாரோ துணை போயிருக்கலாம் என்றும் தெரிகிறது. அது யார் என்பதை அறிய தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அதேசமயம், வட கிழக்குப் பிராந்திய பாதுகாப்பு குறித்த பல முக்கியத் தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சீனா, அறிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் ராணுவ தலைமையகம் அருகே சமீபத்தில் தனியார் கல்வி நிறுவன வளாகம் ஒன்றுக்கு ராணுவம் அனுமதி அளித்திருந்தது. தற்போது இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை அளித்தவர் ராணுவச் செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷ் மற்றும் 3 அதிகாரிகள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்திய ராணுவத்தின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கடந்த 2007ம் ஆண்டு முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. சிக்கிம், பூட்டான், திபெத் ஆகியவை சந்திக்கும் இடத்தில் உள்ள டோகா லா என்ற இடத்தில் உள்ள இந்தியாவின் ஆளில்லாத ராணுவ பங்கர்கள் இரண்டை சீனா தாக்கித் தகர்த்தது.
அதன் பிறகுதான் கம்ப்யூட்டர்களில் இருந்து முக்கியத் தகவல்களை சீனா உளவு பார்ப்பது தெரிய வந்தது.
சீனாவின் செயலால் எந்த அளவுக்கு இந்திய ராணுவத்தின் திட்டமிடல், பாதுகாப்பு உத்திகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications