இந்திய ராணுவ கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் சீனா ஊடுறுவல்!

ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னா என்ற இடத்தில் வடகிழக்குப் பிராந்திய பாதுகாப்பை மேற்கொள்ளும் ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது.
இங்குள்ள கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள்தான் சீனா ஊடுறுவியுள்ளது.
இங்குள்ள கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை சீனாவில் இருந்தபடி சுட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
சீனாவின் உளவு சாப்ட்வேரை இந்திய ராணுவ கட்டமைப்புக்குள் ஊடுருவ வைத்ததில் சீனாவுக்கு இந்திய ராணுவத்தில் யாரோ துணை போயிருக்கலாம் என்றும் தெரிகிறது. அது யார் என்பதை அறிய தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அதேசமயம், வட கிழக்குப் பிராந்திய பாதுகாப்பு குறித்த பல முக்கியத் தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சீனா, அறிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் ராணுவ தலைமையகம் அருகே சமீபத்தில் தனியார் கல்வி நிறுவன வளாகம் ஒன்றுக்கு ராணுவம் அனுமதி அளித்திருந்தது. தற்போது இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை அளித்தவர் ராணுவச் செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷ் மற்றும் 3 அதிகாரிகள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்திய ராணுவத்தின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கடந்த 2007ம் ஆண்டு முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. சிக்கிம், பூட்டான், திபெத் ஆகியவை சந்திக்கும் இடத்தில் உள்ள டோகா லா என்ற இடத்தில் உள்ள இந்தியாவின் ஆளில்லாத ராணுவ பங்கர்கள் இரண்டை சீனா தாக்கித் தகர்த்தது.
அதன் பிறகுதான் கம்ப்யூட்டர்களில் இருந்து முக்கியத் தகவல்களை சீனா உளவு பார்ப்பது தெரிய வந்தது.
சீனாவின் செயலால் எந்த அளவுக்கு இந்திய ராணுவத்தின் திட்டமிடல், பாதுகாப்பு உத்திகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications