2 நாட்களில் தமிழகத்தில் மழை வலுக்கும்
Subscribe to Oneindia Tamil

மையத்தின் இயக்குனர் ரமணன் கூறுகையில்,
இலங்கை மற்றும் தமிழ்நாட்டை ஒட்டி வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் இன்னும் நீடிக்கிறது.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.
செங்கல்பட்டு, சிதம்பரத்தில் 3 செ.மீ. மழையும், தாம்பரம், பரங்கிபேட்டை, வானூர், வல்லத்தில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதே வானிலை நீடிக்கும். அதே நேரத்தில் இரு நாட்களில் தென் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றார்.












Click it and Unblock the Notifications