ரஜினி மகள் மீது வழக்குப் போட்ட தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் - கார் உடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள கோவா படத்தை திரையிட இடைக்காலத் தடை வாங்கியுள்ள தொழிலதிபர் வருண் என்பவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் கோவா என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு வருண் என்ற இளம் தொழிலதிபர் ரூ. 1 கோடி கடன் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வருண் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், கோவா படத் தயாரிப்புக்காக தன்னிடம் லதா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வாங்கிய ரூ 1 கோடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கொடுத்த பின்னரே கோவா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த கோர்ட், படத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதையடுத்து வருணுக்கு கொலை மிரட்டல்கள் வருகிறதாம். வருணின் வீடு தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ளது.

நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் வருணின் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்கள் வந்த காரால் வருணின் கார் மீது மோதினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இது குறித்து வருண் தேனாம்பேட்டை போலீசில் இரவு 1 மணிக்கு புகார் செய்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+