தாமரைக்கனியின் இன்னொரு மகன் ஆணழகனும் அதிமுகவில் இணைந்தார்
சென்னை: மறைந்த அதிமுக எம்.எல்.ஏ தாமரைக்கனியின் இன்னொரு மகனான ஆணழகனும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி வந்த முன்னாள் அமைச்சரும், தாமரைக்கனியின் மகனுமான இன்பத்தமிழன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் தாமரைக்கனியின் இன்னனொரு மகன் ஆணழகனும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஆணழகன் திமுக வழக்கறிஞர் ஆவார். தனது மனைவி சாரதாமணி மற்றும் குழந்தைகளுடன் ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னணியில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார் ஆணழகன்.
அப்போது தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு ஆணழகன் கோரிக்கை வைக்க ஜெயலலிதாவும் குழந்தைக்குப் பெயர் சூட்டினார்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கரு.சுந்தரமூர்த்தி தலைமையில் அமைப்புச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகரங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 96 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications