இலங்கைக்கு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும்- வெங்கையா
சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை ஆராய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கோரியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என்ற வருத்தமும், வேதனையும் இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் உள்ளது.
இலங்கையில் உள்ள முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை பார்வையிட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை இந்திய அரசு அனுப்பி, அவர்களது மறுவாழ்வுக்கு துரித நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இலங்கை போரினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வருகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகா, தான் பதவி விலக காரணமாக கூறியுள்ள 16-ல் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் உண்மையான நிலையை புரிந்துகொள்ள இந்திய அரசு தவறிவிட்டது.
விடுதலைப்புலிகள் கதை முடிந்திருக்கலாம், ஆனால் தமிழர்களின் பிரச்சினை முடியவில்லை. இலங்கை அரசு தமிழர்களை விரைவாக மறுகுடியமர்வு செய்யாவிட்டாலோ, அரசியல் ரீதியான தீர்வு காணாவிட்டாலோ அங்கு புதிய பிரச்சினைகள் தோன்றலாம்.
இலங்கைக்கு இந்திய அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை விரைவில் அனுப்ப வேண்டும். இலங்கை தமிழர்கள் மறுகுடியமர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கும் முன் மாநில அளவிலும், மத்திய அளவிலும் கவனமாக, தீவிரமாக, விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு தமிழகத்தை சேர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.பி.க்கள் குழு மட்டும் சென்றது, தவறல்ல. அவர்கள் திறமையால் தனிப்பட்ட முறையில் சென்றார்கள். ஆனால் இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால் இந்திய அரசே அனைத்து கட்சி குழுவை அனுப்பியிருக்க வேண்டும் என்றார் நாயுடு.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications