தேனியில் இந்தியன் எனர்ஜி நிறுவனத்தின் 49.5 மெ.வா காற்றாலை!
தேனியில் அமையவிருக்கும் இந்த ஆலை தொடர்பாக ரீஜென் பவர்டெக் பிரைவேட் லிமிடெட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது இந்தியன் எனர்ஜி லிமிட்.
இந்த திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 20 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தமிழக மின்சார வாரியத்துக்கு விற்பனை செய்யப்படும்.
காற்றாலை அமைக்கத் தேவையான நிலத்தை ஏற்கெனவே வாங்கிவிட்ட இந்த நிறுவனம், முதல் கட்ட பணிகளை இம்மாதம் துவங்குகிறது. ஜூலை 2010-ல் கட்டுமானப் பணிகள் முடிந்து, ஆலை செயல்படத் துவங்கும்.
இரண்டு கட்டமாக செயல்படவிருக்கும் இந்த புதிய ஆலையில், முதல் பிரிவில் 11 டர்பைன்கள் அமையும். ஒவ்வொன்றும் 1.5 மெகாவாட் திறன் கொண்டது. அந்த வகையில் முதல் கட்டத்தில் மட்டும் 16.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இரண்டாம் கட்டத்தில், 22 டர்பைன்கள் அமையும். இதில் மொத்தம் 33 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இத்தகவல்களை இந்தியன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.