செல்போன்-60 கல்லூரி மாணவிகள் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை மகளிர் கல்லூரியில் செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி 60 மாணவிகள் வகுப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.எம். படிக்கும் மாணவிகள் சிலர் நூலக வகுப்பு நேரத்தில் செல்போனில் எப்.எம்.ரேடியோ பாட்டு கேட்டபடி நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அருகில் உள்ள வகுப்பு ஆசிரியை அளித்த புகாரின் பேரில் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரு வாரம் கல்லூரிக்கு வரவேண்டாம் என கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
சம்பவம் நடந்த நேற்றுமுன்தினம் தாங்கள் கல்லூரியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நேற்று காலை வழக்கம் போல அந்த பி.பி.எம். மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் அவர்களை வகுப்புக்குள் வர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த மாணவிகளில் பலர் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பெற்றோர் பலர் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். கல்லூரி செயலாளர் லட்சுமியை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. 3 மணிநேர அலைகழிப்புக்கு பின்னர் ஒவ்வொரு பெற்றோராக சந்திக்க வரும்படி செயலாளர் லட்சுமி அழைத்து பேசி அனுப்பினார்.
வெளியே வந்த பெற்றோர் ஒருவர் கூறுகையில், 'நான் ஒரு அரசு ஊழியர். எனது மகள் இந்த கல்லூரியில் படிக்கிறார். செல்போன் வைத்திருக்கவில்லை. ஆனால் அவர் ஒருவாரத்திற்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். யாரோ 2 மாணவிகள் செல்போனில் பேசியதற்காக அனைத்து மாணவிகளும் சஸ்பெண்டு என்றால் இது காட்டு தர்பாரா?
வகுப்புக்கு வரலாம் ஆனால் ஆசிரியை வகுப்பு நடத்தமாட்டார் என்று கல்லூரி செயலாளர் கூறுகிறார். தப்பு செய்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தவறே செய்யாத மாணவிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல' என்று கொந்தளித்தார்.
இதற்கிடையே, இதுகுறித்து செயதி சேகரிக்க அங்கு சென்ற தனியார் 'டிவி' ஊழியர்களுக்கும், கல்லூரி பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் செக்யூரிட்டி பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்த விவகாரம் குறித்து கல்லூரி செயலாளர் லட்சுமி கூறுகையில், 'எந்த ஒரு மாணவியும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. 60 மாணவிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக கூறும் செய்தி தவறு. கல்லூரியில் நிறைய மாணவிகள் படிக்கிறார்கள். சில மாணவிகள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications