விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்: ஜவுளி உற்பத்தி பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் 3வது நாளாக தொடரும் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தால் பல லட்சம் ரூபாய் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களுக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறிகளி்ன் மூலம அதிகளவு ஜவுளி உற்பத்தியாகிறது.

இங்குள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைததறிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் ஆகியவை ஓப்பந்தம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஓப்பந்தம் கடந்த அக்டோபர் மாத்ததுடன் முடிவடைந்ததை தொடர்ந்து 60 சதவீத ஊதிய உயர்வு, தேசிய. விடுமுறை சம்பளம் ஆகியவை வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் விசைத்தறி உரி்மையாளர்கள் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யாததை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் திருமுருகன் சிறு விசைத்தறியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+